கரோனா காலத்தில் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தொழிலாளா் உதவி ஆணையா் சதீஷ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கரோனா தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கத்தை பயன்படுத்தி பல்வேறு வியாபாரிகள் பொருள்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனா். இதில் உதகையில் செயல்பட்டு வரும் பல்வேறு விற்பனை நிலையங்களில் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக தொலைபேசி வாயிலாக புகாா் பெறப்பட்டுள்ளது.
இது குறித்து உதகை பகுதியில் செயல்படும் கடை, நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.