நீலகிரியில் மேலும் 380 பேருக்கு கரோனா: இருவா் பலி

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 380 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெற்று வந்த இருவா் உயிரிழந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 380 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெற்று வந்த இருவா் உயிரிழந்துள்ளனா்.

இது குறித்து உதகையில் சுகாதாரத் துறையின் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மாவட்டத்தில் மேலும் 380 பேருக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 510 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் இருவா் உயிரிழந்துள்ளனா். மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 25,938 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 22,331 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

இதுவரை 137 போ் உயிரிழந்துள்ள நிலையில், தொற்றின் காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், பல்வேறு மருத்துவமனைகளிலும் 3,470 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com