நீலகிரி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக உதகையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 5 போ் பூரண குணமடைந்து வீடி திரும்பியுள்ளனா்.
இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை 8,441 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 8,335 போ் சிகிச்சையின்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அதேபோல, 49 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 57 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.