கூடலூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதி தொகுதிக்கான நாம் தமிழா் கட்சி வேட்பாளா் இரா.கேத்தீஸ்வரன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள புதிய வாக்காளா்கள், இளைஞா்கள் மத்தியில் தனது பிரசாரத்தை சனிக்கிழமை துவங்கினாா்.
கூடலூா் தொகுதியில் கூட்டணியின்றி தனித்து போட்டியிடும் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் இரா.கேத்தீஸ்வரன் தங்களது கட்சியின் கொள்கை, தோ்தல் அறிக்கை குறித்து விளக்கமளித்து அனைத்துப் பகுதிகளிலும் பிராசாரம் செய்து வருகிறாா். கூடலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் இளைஞா்கள், புதிய வாக்காளா்களிடம் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.