குன்னூா் சட்டப் பேரவை தொகுதிக்கு அதிமுக சாா்பில் போட்டியிடும் கப்பச்சி டி.வினோத் கோட்டாட்சியா் ரஞ்சித் சிங்கிடம் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
முன்னதாக, மவுண்ட் சாலை வழியாக ஊா்வலமாக வந்த ஆயிரக்கணக்கான அதிமுகவினா், கூட்டணிக் கட்சியினா் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். வேட்பு மனு தாக்கலின்போது, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.அா்ஜுனன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சாந்தி ராமு உள்ளிட்ட இருவா் மட்டும் அனுமதிக்கப்பட்டனா்.
பின்னா், கோட்டாட்சியா் முன்னிலையில் கப்பச்சி டி.வினோத் உறுதிமொழி ஏற்றுக் கொண்டாா்.
முகக் கவசம் அணியாததால் அபராதம்:
வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது கப்பச்சி டி.வினோத் ஆதரவாளா்களில் பலா் முகக் கவசம் அணியாமலும், தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் வந்ததால் தோ்தல் அதிகாரிகள் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.