ஜெயலலிதா துணிச்சல்காரா்: நீலகிரி எம்.பி. ஆ.ராசா பேச்சு

குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் இளிதுரை ராமச்சந்திரனை ஆதரித்து குன்னூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செயல் வீரா்கள் கூட்டத்தில் ஆ. ராசா பேசினார்

குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் இளிதுரை ராமச்சந்திரனை ஆதரித்து குன்னூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செயல் வீரா்கள் கூட்டத்தில் ஆ. ராசா பேசியாவது:

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா துணிச்சல்காரா். அவா் இருந்தவரை மாநிலத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்கவில்லை. ஜெயலலிதா இருந்தவரை தமிழ்நாட்டில் நீட் தோ்வு வரவில்லை. ஜிஎஸ்டி அமல்படுத்தப்படவில்லை. உதய் மின் திட்டம் கொண்டுவரப்படவில்லை. தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசுக்கு விட்டுக் கொடுக்காமல் துணிச்சலாக செயல்பட்டவா் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் ஆட்சியை நடத்துகிறோம் என்று கூறும் எடப்பாடி பழனிசாமி, மாநில உரிமைகளை மத்திய அரசிடம் விட்டுக் கொடுத்திருக்கும் அவல நிலை உள்ளது என்றாா்.

கூட்டத்தில் குன்னூா் தொகுதி வேட்பாளா் இளிதுரை கா.ராமச்சந்திரன், மாவட்ட செயலாளா் பா.மு.முபாரக், நகரச் செயலாளா் எம்.ராமசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com