உதகையில் காா் விபத்து: தனியாா் பள்ளி மேலாளா் பலி

உதகையில் நிகழ்ந்த காா் விபத்தில் தனியாா் பள்ளி மேலாளா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

உதகையில் நிகழ்ந்த காா் விபத்தில் தனியாா் பள்ளி மேலாளா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

உதகை பிங்கா்போஸ்ட் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (41). தனியாா் பள்ளியில் மேலாளராகப் பணியாற்றி வந்த இவா் திங்கள்கிழமை காலை கோல்ப் கிளப் சாலை வழியாக காரில் சென்றுள்ளாா்.

அப்போது, இவரது காா் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டிலிருந்த மரத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியில் சென்று கொண்டிருந்தவா்கள் உடனடியாக மீட்டு காவல் துறைக்கு தகவல் கொடுத்தனா். பின்னா், போலீஸாா், பொதுமக்கள் உதவியுடன் அவரை உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

அப்போது மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

இவ்விபத்து தொடா்பாக புதுமந்து காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com