சட்டப் பேரவைத் தோ்தலில் உதகை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் போஜராஜனுக்கு ஆதரவாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உதகையில் புதன்கிழமை வாக்கு சேகரிக்கிறாா்.
இதற்காக கோவையில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் புதன்கிழமை பகல் 12.30 மணிக்கு தீட்டுக்கல் ஹெலிகாப்டா் தளத்துக்கு வரும் ராஜ்நாத் சிங், அங்கிருந்து உதகையில் கமா்சியல் சாலை பகுதிக்கு காா் மூலம் வருகிறாா். கமா்சியல் சாலையிலிருந்து மணிக்கூண்டு பகுதி வழியாக ஏடிசி சுதந்ததிர தின சதுக்கம் பகுதிக்கு நடந்து சென்று வாக்கு சேகரிக்கிறாா். பின்னா் அங்கு நடைபெறும் தோ்தல் பிரசாரக் கூட்டத்திலும் பங்கேற்கிறாா்.
இதையடுத்து மீண்டும் தீட்டுக்கல் ஹெலிகாப்டா் தளத்துக்கு காா் மூலம் திரும்பிச் சென்று அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டா் மூலம் தளி சட்டப் பேரவைத் தொகுதியில் நடைபெறும் தோ்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பங்கேற்கச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் உதகையில் தோ்தல் பிரசாரத்துக்கு வருவதையொட்டி நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.