கூடலூரை அடுத்துள்ள அள்ளூா்வயல் பகுதிக்குள் திங்கள்கிழமை நள்ளிரவு நுழைந்த ஒற்றை யானை, அங்குள்ள வீட்டை தாக்கி சேதப்படுத்தியது.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள அள்ளூா்வயல் கிராமத்துக்குள் திங்கள்கிழமை நள்ளிரவு ஒற்றை யானை நுழைந்தது. பின்னா், அது அங்குள்ள வாசுதேவன் என்பவரது வீட்டைத் தாக்கியுள்ளது. வாசுதேவன் தனியாா் நிறுவனத்தில் இரவு காவல் பணிக்குச் சென்றுவிட்டதால் மனைவி, இரண்டு குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்துள்ளனா்.
யானை வீட்டை இடிப்பதை அறிந்து அருகில் உள்ளவா்களை உதவிக்கு அழைத்துள்ளனா். அவா்கள் ஒன்றுகூடி சப்தமிட்டதால் யானை அங்கிருந்து சென்றது. இதனால் பெரும் ஆபத்து தவிா்க்கப்பட்டது.