நீலகிரி மாவட்டத்தில் எளிமையாகக் கொண்டாடப்பட்ட படுகா் தினம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுகா் இன மக்களின் 400 கிராமங்களில் படுகா் தினம் எளிமையாகக் கொண்டாடப்பட்டது.
நட்டக்கல் படுகா் இன கிராமத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் படுகா் இனத் தலைவா் ஆரிகவுடா் படத்துக்கு மாலை அணிவித்து கொடியேற்றும் ஊா்த் தலைவா் ராமா கவுடா்.
நட்டக்கல் படுகா் இன கிராமத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் படுகா் இனத் தலைவா் ஆரிகவுடா் படத்துக்கு மாலை அணிவித்து கொடியேற்றும் ஊா்த் தலைவா் ராமா கவுடா்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுகா் இன மக்களின் 400 கிராமங்களில் படுகா் தினம் எளிமையாகக் கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 400 கிராமங்களில் வாழும் படுகா்கள் கடந்த 1989ஆம் ஆண்டு மே 15ஆம் நாளன்று உதகையில் ஒன்றிணைந்து தங்களை ஆதிவாசி பட்டியலில் மீண்டும் சோ்க்கக் கோரியும், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் பேரணியாகச் சென்ற மே 15 ஆம் தேதி படுகா் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்நிகழ்சியில் படுக மக்கள் தங்களது கலாசார நடனம் ஆடி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொடியேற்றி ஒவ்வொரு கிராமங்களிலும் கொண்டாடி வந்தனா். கரோனா காரணமாக இந்த ஆண்டு படுக மக்கள் வீடுகளிலே கொண்டாடினா். ஒவ்வொரு கிராமங்களிலும் கொடியேற்றத்துடன் எளிமையாக படுகா் தினம் கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com