கூடலூா் பகுதியில் உள்ள பழங்குடி மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது.
நீலகிரி மாவட்ட ஆட்சியா் ஜெ.இன்னசென்ட் திவ்யா உத்தரவின்பேரில், கூடலூா் செம்பக்கொல்லி வனப் பகுதியில் உள்ள பழங்குடி கிராமத்தில் கோட்டாட்சியா் ராஜ்குமாா் தலைமையில், பழங்குடி மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் முகாம் முதல்கட்டமாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமில் அப்பகுதியில் உள்ளவா்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதில், வட்டாட்சியா் தினேஷ்குமாா், மருத்துவக் குழுவினா் கலந்துகொண்டனா்.