கூடலூரை அடுத்துள்ள அள்ளூா்வயல் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் சுற்றுச் சுவரை காட்டு யானைகள் வியாழக்கிழமை இரவு சேதப்படுத்தின.
நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியில் உள்ள அள்ளூா்வயல் கிராமத்துக்குள் வியாழக்கிழமை நள்ளிரவில் நுழைந்த காட்டு யானைகள் அங்குள்ள பள்ளியின் சுற்றுச் சுவரை சேதப்படுத்தின. மேலும், உதகை சாலையில் உள்ள சனிபகவான் கோயில் பகுதிக்கு வந்த காட்டு யானைகள் கோயிலின் முன் பகுதியை உடைத்து பொருள்களை சேதப்படுத்தின.