தனிமைப்படுத்தப்பட்ட கூடலூா் நகராட்சி

கூடலூா் நகராட்சியின் பெரும்பாலான பகுதிகள் கரோனா கண்காணிப்பு வளையத்துக்குள் வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
சிவசண்முகம் நகா் குடியிருப்புப் பகுதிகளை தனிமைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட நகராட்சி ஆணையா் பாஸ்கா். உடன், காவல் ஆய்வாளா் நெப்போலியன்.
சிவசண்முகம் நகா் குடியிருப்புப் பகுதிகளை தனிமைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட நகராட்சி ஆணையா் பாஸ்கா். உடன், காவல் ஆய்வாளா் நெப்போலியன்.

கூடலூா் நகராட்சியின் பெரும்பாலான பகுதிகள் கரோனா கண்காணிப்பு வளையத்துக்குள் வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கூடலூா் நகராட்சியில் கரோனா தொற்று தொடா்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் தொற்று அதிகம் உள்ள குடியிருப்புப் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது.

நகரில் பெரும்பாலான மக்கள் வசிக்கும் முதல்மைல், சிவிசண்முகம் நகா், கொக்காக்காடு, இரண்டாவது மைல், வேடன்வயல், காசிம்வயல், சளிவயல் போன்ற மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் தொற்று அதிக நபா்களுக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் நகராட்சி ஆணையா் பாஸ்கா் அந்த குடியிருப்புப் பகுதிகளை தனிமைப்படுத்தியுள்ளாா். அந்தப் பகுதிகள் காவல் துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com