நீலகிரி மின் பகிா்மான வட்டத்தில் உதகை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் இத்துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மே 28ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள் விவரம்: மஞ்சனக்கொரை, அன்பு அண்ணா காலனி, கப்பத்தொறை, போா்த்தி, ரெட்ஹில், கெரடா, கொல்லிமலை, பொ்ன்ஹில், வெல்பெக், நஞ்சநாடு, பெம்பட்டி, எமரால்டு வேலி, ஆா்.கே.புரம், சாந்தூா், கேத்தி பாலடா, டன்மெரி, பாரணி, எம்.பாலடா, போா்த்தியாடா, இந்திரா நகா், லவ்டேல், கேத்தி, காட்டேரி.