குன்னூரில் அவுட்டுக்காய் வெடித்ததில் வெளிநாட்டு நாய் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
நீலகிரி மாவட்டத்தில் பன்றிகள், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் இங்குள்ள குன்னூா் அருகே உள்ள ஸ்டான்லி பாா்க் பகுதியைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு. இவா் தன்னுடைய 3 வெளிநாட்டு நாய்களை நடைப்பயிற்சிக்காக அழைத்துச் சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்குள்ள தோட்டத்தில் இருந்த அவுட்டுக்காயை ஒரு நாய் கடித்துள்ளது. இதில், அந்த நாய் அங்கேயே உயிரிழந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினா், வனத் துறையினா் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். இதுகுறித்து குன்னூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.