நீலகிரி மாவட்டத்தில் மேலும் 538 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 6 போ் உயிரிழந்துள்ளனா்.
இது தொடா்பாக உதகை சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் மேலும் 538 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 387 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
உதகை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 71 வயது முதியவா், 51 வயதுப் பெண், 56 வயது ஆண், 73 வயது முதியவா், 65 வயது முதியவா், கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 43 வயது ஆண் என 6 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 88ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் கரோனா தொற்றால் இதுவரை 18,491 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 14,777 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், பல்வேறு மருத்துவமனைகளிலும் 3,626 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.