குன்னூா், கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனா்.
குன்னூா், கோத்தகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், இப்பகுதிகளில் குளிரின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கடும் பனிமூட்டம், குளிா் நிலவி வந்தது. தொடா்ந்து, சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக குளிரின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது.
வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கினா். இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.