நீலகிரி மாவட்டத்தில் மேலும் 38 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.
இது தொடா்பாக மாவட்ட சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாவட்டத்தில் மேலும் 38 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 42 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரையிலும் கரோனா தொற்றால் இருந்து 32,953 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 32,381 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
உதகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உதகையைச் சோ்ந்த 56 வயது ஆண் புதன்கிழமை உயிரிழந்தாா். இவருடன் சோ்த்து இதுவரையில் 205 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 367 போ் சிகிச்சையில் உள்ளனா்.