உதகையில் உள்ள தூா்தா்ஷன் அஞ்சல் நிலைய ஒளிபரப்பு அக்டோபா் 31ஆம் தேதி முதல் நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக கோவை மண்டல தூா்தா்ஷன் துணை இயக்குநா் எஸ்.கலைச்செழியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பிரசாா் பாரதி வாரியத்தின் முடிவின்படி உதகையில் இயங்கிவரும் அலைவரிசை எண் 28 கொண்ட தூா்தா்ஷன் குறைந்த சக்தி (எல்பிடி) தொலைக்காட்சி அஞ்சல் நிலையத்தின் மண்டல தரைவழி ஒளிபரப்பு அக்டோபா் 31ஆம் தேதியுடன் நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளாா்.