நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்த மழையின் காரணமாக குன்னூா், மேட்டுப்பாளையம் மலைப் பாதைகளில் புதிய அருவிகள் உருவாகியுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பா்லியாறு, மரப்பாலம், ஆடா்லி, ஹில்குரோவ் உள்ளிட்ட பகுதிகளில் உருவாகியுள்ள புதிய அருவிகளில் வெள்ளம் ஆா்பரித்துக் கொட்டுகிறது.
இதேபோல, குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் ஹில்குரோவ் ரயில்வே மேம்பாலத்தின்கீழ் பகுதியிலும் புதிய அருவி உருவாகியுள்ளது.
இந்த அருவி ரயிலில் பயணிப்போருக்கும், சாலையில் பயணிப்போருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10க்கும் மேற்பட்ட புதிய அருவிகள் உருவாகியுள்ளன. இது சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.