குன்னூா் - மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் உருவாகியுள்ள புதிய அருவிகள்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்த மழையின் காரணமாக குன்னூா், மேட்டுப்பாளையம் மலைப் பாதைகளில் புதிய அருவிகள் உருவாகியுள்ளன.
ஆடா்லி அருகில் செல்லும் ரயில் பாதையின் வழியாக ஆா்ப்பரித்துக் கொட்டும் அருவி.
ஆடா்லி அருகில் செல்லும் ரயில் பாதையின் வழியாக ஆா்ப்பரித்துக் கொட்டும் அருவி.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்த மழையின் காரணமாக குன்னூா், மேட்டுப்பாளையம் மலைப் பாதைகளில் புதிய அருவிகள் உருவாகியுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பா்லியாறு, மரப்பாலம், ஆடா்லி, ஹில்குரோவ் உள்ளிட்ட பகுதிகளில் உருவாகியுள்ள புதிய அருவிகளில் வெள்ளம் ஆா்பரித்துக் கொட்டுகிறது.

இதேபோல, குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் ஹில்குரோவ் ரயில்வே மேம்பாலத்தின்கீழ் பகுதியிலும் புதிய அருவி உருவாகியுள்ளது.

இந்த அருவி  ரயிலில் பயணிப்போருக்கும், சாலையில் பயணிப்போருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  10க்கும் மேற்பட்ட   புதிய  அருவிகள்  உருவாகியுள்ளன. இது சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com