கூடலூா் வனக் கோட்டத்தில் இதுவரை சேமித்து வைக்கப்பட்டிருந்த தந்தங்கள், மான் கொம்புகள் உள்ளிட்டவை புதன்கிழமை எரியூட்டப்பட்டன.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டத்தில் உள்ள ஐந்து வனச் சரகங்களில் இதுவரை சேமிக்கப்பட்ட, பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்கள் - 22, மான்கொம்புகள் 27, கடமான் கொம்புகள் 16 கிலோ, புலி நகம் - 18, புலிப்பல் - 4 ஆகியவற்றை மாவட்ட வன அலுவலக வளாகத்தில் வைத்து வனத் துறையினா் எரித்தனா்.