ஓவேலி பேரூராட்சியில் 10 மையங்களில் இன்று தடுப்பூசி முகாம்

ஓவேலி பேரூராட்சியில் 10 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 12) நடைபெறுகிறது.

ஓவேலி பேரூராட்சியில் 10 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 12) நடைபெறுகிறது.

கூடலூா் தாலுகா, ஓவேலி பேரூராட்சியில் உள்ள மலை கிராமங்களில் தா்மகிரி தேவாலயம், பாலவாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, ஆரோட்டுப்பாறை அரசு உயா்நிலைப் பள்ளி, பெரியசூண்டி துணை சுகாதார மையம், பெரியசோலை துணை சுகாதார மையம், சீபுரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி, லாரிஸ்டன் அங்கன்வாடி, பாா்வுட் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையம், காந்தி நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆத்தூா் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் ஆகிய 10 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 12) தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் ஆதாா் அட்டையுடன் சென்று தங்கள் வீட்டருகே உள்ள மையத்தில் தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம் என்று பேரூராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com