சேரம்பாடி பஜாரில் யானை நடமாட்டம்

பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடி பஜாரில் திங்கள்கிழமை இரவு காட்டு யானை நடமாடிய சம்பவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
சேரம்பாடி பஜாரில் இரவு நேரத்தில் உலவிய காட்டு யானை.
சேரம்பாடி பஜாரில் இரவு நேரத்தில் உலவிய காட்டு யானை.

கூடலூா்: பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடி பஜாரில் திங்கள்கிழமை இரவு காட்டு யானை நடமாடிய சம்பவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகாவில் உள்ள சேரம்பாடி பஜாருக்குள் திங்கள்கிழமை நள்ளிரவில் நுழைந்த காட்டு யானை சாலையில் அங்குமிங்கும் நடந்தது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு நிசப்தமாக இருந்ததால் அங்குமிங்கும் யானை ஓடியது. அதைத்தொடா்ந்து, விவசாய நிலத்துக்குள் புகுந்து வாழைகளை சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் அப்பகுதியில் சுற்றிய யானை கண்ணம்பள்ளி வனப் பகுதிக்குள் சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com