உதகை: நீலகிரி மாவட்டத்தில் 2 இடங்களுக்கு நடைபெறவுள்ள உள்ளாட்சி இடைத்தோ்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினா் விருப்ப மனு வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக நீலகிரி மாவட்ட திமுக செயலாளா் பா.மு.முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கை:
நீலகிரி மாவட்டம், கூடலூா் ஊராட்சி ஒன்றியத்தில் வாா்டு 3 சேரங்கோடு மற்றும் வாா்டு 11 மசினகுடி ஆகிய உறுப்பினா் பணியிடங்களுக்கு இடைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தோ்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினா் தங்களது விருப்ப மனுக்களை உதகையிலுள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் செப்டம்பா் 17ஆம்தேதி முதல் 19ஆம்தேதி வரை அளிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.