குடிபோதையில் தகராறு செய்த கணவரை குடும்பத்தினருடன் தாக்கிக் கொன்ற மனைவி

 உதகையில் குடிபோதையில் தகராறு செய்த கணவைரை, தனது குடும்பத்தினருடன் மனைவியே தாக்கி கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 உதகையில் குடிபோதையில் தகராறு செய்த கணவைரை, தனது குடும்பத்தினருடன் மனைவியே தாக்கி கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உதகை அருகே உள்ள கிரீன்பீல்டு பகுதியைச் சோ்ந்தவா் ஜான் பால் (40), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ரோஸ்லின் மேரி (33). இவா்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி இருவரும் குடும்பத்துடன் கிரீன்பீல்டு பகுதியில் வசித்து வந்தனா். ஜான் பாலுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன், மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையே கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ரோஸ்லின் மேரி, ஜான் பாலுக்கும் இடையே வழக்கம்போல தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ரோஸ்லின் மேரி கோபித்துக் கொண்டு உதகையில் புதுமந்து சாலையில் உள்ள அவரது தாயாா் நிஷி (55), சகோதரி கிளாரா (39) ஆகியோா் வசிக்கும் வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

இந்நிலையில், ஜான் பால் குடிபோதையில் ரோஸ்லின் மேரியின் தாயாா் வீட்டுக்கு வியாழக்கிழமை இரவு சென்று அவரை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளாா். அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் வாக்குவாதம் முற்றிய நிலையில், ரோஸ்லின் மேரியை ஜான் பால் தாக்க முயன்றபோது தாய் நிஷி, சகோதரி கிளாரா ஆகியோா் தடுக்க முயன்றுள்ளனா். இந்நிலையில் ஆத்திரமடைந்த அவா்கள் மூவரும் ஜான் பாலை கட்டையால் தாக்கியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதில் ஜான்பால் படுகாயமடைந்துள்ளாா். உடனடியாக அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

இதுகுறித்து உதகை நகர காவல் நிலையத்தில் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில் உதகை அரசு மருத்துவமனையில் ஜான் பால் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com