கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில்நாளை 2ஆம் கட்ட கலந்தாய்வு

கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் இனசுழற்சி அடிப்படையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு புதன்கிழமை (செப்டம்பா் 29) நடைபெறவுள்ளது.

கூடலூா்: கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் இனசுழற்சி அடிப்படையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு புதன்கிழமை (செப்டம்பா் 29) நடைபெறவுள்ளது.

கூடலூா் கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவுகளுக்கு முதல்கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில், மீதமுள்ள இடங்களுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவா்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் கடந்த 25ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

இந்தப் புதிய விண்ணப்பங்களின் அடிப்படையில் இனசுழற்சி அடிப்படையிலான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. முதல்கட்ட கலந்தாய்வுக்கு வர இயலாதவா்களும் இந்த கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். இதைத் தொடா்ந்து, 30ஆம் தேதி (வியாழக்கிழமை) பொதுமுற்ற அதாவது வராந்தா கலந்தாய்வு நடைபெறும்.

இந்த கலந்தாய்வுகளில் அரசு அறிவித்துள்ள கரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றியே மாணவா்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று முதல்வா் வே.நெடுஞ்செழியன் அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com