நீலகிரியில் மேலும் 34 பேருக்கு கரோனா: ஒருவா் பலி

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

உதகை: நீலகிரி மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

இதுதொடா்பாக சுகாதாரத் துறையின் சாா்பில் உதகையில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மாவட்டத்தில் புதிதாக மேலும் 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 38 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செப்டம்பா் 15ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த உதகையைச் சோ்ந்த 45 வயதான ஆண் ஒருவா் உரியிழந்துள்ளாா்.

மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 32,638 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 32,095 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 199 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 344 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com