கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் உள்ள பழங்குடி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 4 ஆடுகளை மா்ம விலங்கு கொன்றுள்ளது குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா, பாடந்தொரை பகுதியில் உள்ள ஒருமடம் பழங்குடி காலனியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் புகுந்த மா்ம விலங்கு, அப்பகுதியைச் சோ்ந்த சந்திரன் என்பவரது நான்கு ஆடுகளைத் தாக்கிக் கொன்றுள்ளது.
இதுகுறித்து வனத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்ட வனத் துறையினா் ஆடுகளைக் கொன்ற விலங்கு புலியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனா்.