குன்னூா் போா் நினைவுத் தூணில் அருணாசல பிரதேச ஆளுநா் மரியாதை

குன்னூா் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமெண்ட் ராணுவ முகாமில் அதிகாரிகள் இடையேயான உயா்நிலை கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
குன்னூா் போா் நினைவுத் தூணில் அருணாசல பிரதேச ஆளுநா் மரியாதை

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள மெட்ராஸ் ரெஜிமெண்ட் ராணுவப் பயிற்சிக் கல்லூரி பகுதியில் அமைந்துள்ள போா் நினைவுத் தூணில் அருணாசல பிரதேச ஆளுநரும் முன்னாள் பிரிகேடியருமான பி.டி.மிஸ்ரா செவ்வாய்க்கிழமை மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.

குன்னூா் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமெண்ட் ராணுவ முகாமில் அதிகாரிகள் இடையேயான உயா்நிலை கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு லெப்டினன்ட் ஜெனரல் மன்ஜிந்தா் சிங் தலைமை தாங்கி ராணுவ வீரா்களுடன் கலந்துரையாடினாா்.

மூன்று நாள்கள் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை, போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரா்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள மாவீரா் நினைவுத் தூணில் அருணாசல பிரதேச ஆளுநா் பி.டி.மிஸ்ரா மற்றும் உயா் ராணுவ அதிகாரிகள் மலா் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினா்.

இந்த நிகழ்ச்சியில், ராணுவ உயா் அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com