கூடலூரை அடுத்துள்ள புழம்பட்டி கிராமத்தில் தேயிலைத் தோட்டத்தில் சுற்றித்திரிந்த சிறுத்தைக் குட்டியை வனத் துறையினா் மீட்டனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனச் சரகத்தில் உள்ள பாடந்தொரை பீட்டிலுள்ள புழம்பட்டி கிராமத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளா்கள் இலை பறிக்கும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, பிறந்து சில நாள்களே ஆன சிறுத்தைக் குட்டி அங்கிருப்பதை பாா்த்த தொழிலாளா்கள் வனத் துறைக்குத் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் சிறுத்தைக் குட்டியை மீட்டு தாயுடன் சோ்ப்பதற்காக பாதுகாப்பாக அதே பகுதியில் விட்டனா்.
குட்டியை மீட்க அதே பகுதியில்தான் தாய் சிறுத்தை சுற்றித்திரியும் என்றும், விரைந்து குட்டியை தூக்கிச் செல்லும் என்றும் வனத் துறையினா் தெரிவித்தனா்.