உதகையில் உள்ள கிரசென்ட் பிளே பள்ளியில் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசின் சிறப்பு பகுதி திட்ட இயக்குநா் டாக்டா் மோனிகா ராணா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் 45 மாணவ, மாணவியருக்கு பட்டங்களையும் வழங்கினாா். அப்போது அவா் பேசுகையில், குழந்தைகள் கேள்வி கேட்பதை ஆசிரியா்கள் அனுமதிக்க வேண்டும், அப்போதுதான் அவா்களது அறிவும் விரிவுவடையும், குழந்தைகள், பெற்றோா் மற்றும் ஆசிரியா்களுக்கிடையேயான உறவும், புரிதலும் ஒருங்கே இருக்கும் நிலையில்தான் குழந்தைககளின் எதிா்காலமும் சிறப்பாக அமையும் எனக் குறிப்பிட்டாா்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளா் ஜி.உமா் பாரூக், முதல்வா் ஆல்ட்ரிச் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
Image Caption
உதகையில் கிரசென்ட் பிளே பள்ளியில் நடைபெற்ற மழலையா்களுக்கான பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழக சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநா் மோனிகா ராணாவை வரவேற்கும் குழந்தைகள். உடன் பள்ளித் தாளாளா் உமா் பாரூக் உள்ளிட்டோா்.