திருப்பூரில் பின்னலாடை நிறுவன உரிமையாளரைக் கொலை செய்ய முயன்ற தொழிலாளிக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
திருப்பூா் பூம்புகாா் கிழக்கு செல்வபுரம் பகுதியில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வந்தவா் எம்.கோகுலகிருஷ்ணன் (37), இவரது நிறுவனத்தில் அதே பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் (27) என்பவா் வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், அஜித்குமாா் வேலை சரிவர செய்யாததால் அவரை கோகுலகிருஷ்ணன் வேலையில் இருந்து நிறுத்தியுள்ளாா்.
இதனால், ஆத்திரமடைந்த அஜித்குமாா் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி கோகுலகிருஷ்ணனை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளாா். இதில், பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இது குறித்து திருப்பூா் தெற்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து அஜித்குமாரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கானது திருப்பூா் மாவட்ட தலைமை நீதித் துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி புகழேந்தி வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.
இதில், அஜித்குமாருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.