நீலகிரி: சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரித் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி, காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.
அரசு கலைக் கல்லூரி திடலில் நடைப்பெற்ற விழாவில் ரூ.73 லட்சத்து 27 ஆயிரத்து 499 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு கேடயங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நீலகிரியில் உள்ள தோடர், கோத்தர், படுகர் போன்ற மலை கிராமங்களில் வசிக்கும் மக்களின் பாரம்பரிய இசையுடன் நடன நிகழ்ச்சியை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.