கூடலூரில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூடலூா் ரோட்டரி கிளப், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய முகாமை ரோட்டரி கிளப் தலைவா் சுபையா் துவக்கிவைத்தாா்.
மருத்துவா்கள் ஜூலினா, ஜினிஷா தலைமையிலான மருத்துவக் குழுவினா் நோயாளிகளை பரிசோதனை செய்து சிகிச்சையளித்தனா். இதில், 200க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.