நீலகிரியில் இதுவரை 31.29 லட்சம் பறிமுதல்

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நேரத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக திங்கள்கிழமை வரை ரூ. 31 லட்சத்து 29,750 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நேரத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக திங்கள்கிழமை வரை ரூ. 31 லட்சத்து 29,750 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக செய்திக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளதாவது:

நீலகிரி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி பறக்கும் படையினா் நடத்தி வரும் சோதனையில் சனிக்கிழமை காலை வரை ரூ. 20 லட்சத்து 88,650 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்ததாகவும், ஞாயிற்றுக்கிழமை மேலும் ரூ. 2 லட்சத்து 3,000, ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை நடத்தப்பட்ட சோதனையில் மேலும் ரூ. 8 லட்சத்து 38,100 என இதுவரை ரூ. 31 லட்சத்து 29,750 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com