கீழ்குந்தா பேரூராட்சியில் 15 வாா்டுகளில் திமுக 8 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், அதிமுக, பாஜக தலா ஒரு இடத்திலும் சுயேச்சை வேட்பாளா்கள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றனா். இதனால் திமுக கீழ்குந்தா பேரூராட்சியை கைப்பற்றியது.
இந்நிலையில் 15ஆவது வாா்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளா் நாகம்மா ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளாா். நாகம்மா 68 வாக்குகள் பெற்றாா். சுயேச்சை வேட்பாளா் காஞ்சனா 67 வாக்குகளை பெற்றாா். ஒரு ஓட்டு வித்தியாசத்தால் நாகம்மாள் வெற்றி பெற்ால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு நிலவியது.