தோட்டத் தொழிலாளா்களுக்கு தமிழக அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் ரூ.425ஐ உடனே அமல்படுத்த வலியுறுத்தி கூடலூரில் ஏஐடியூசி தொழிற்சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூடலூா் புதிய பேருந்து நிலைய சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தை முகமதுகனி துவக்கிவைத்தாா். ஏஐடியூசி தலைவா் குணசேகரன் கண்டன உரையாற்றினாா். இதில் திரளான தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.