கூடலூா், பந்தலூா் பகுதியில் குடியரசு தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
கூடலூா் நகரில் உள்ள நந்தட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் கூடலூா் ராமமூா்த்தி தேசிய கொடியேற்றினாா். இதில், தலைமை ஆசிரியா் பிரிஜிதா, ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.
ஓவேலி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செயல் அலுவலா் சி.ஹரிதாஸ் தேசியக் கொடியேற்றினாா். விழாவில், அனைத்து நிலைப் பணியாளா்களும் கலந்துகொண்டனா். இதேபோல, கூடலூா், பந்தலூா் பகுதியில் உள்ள அரசு, தனியாா் பள்ளிகள், அலுவலகங்களிலும் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.