நீலகிரி மாவட்டத்தில் மேலும் 373 பேருக்கு கரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சுகாதாரத் துறையின் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மாவட்டத்தில் புதிதாக மேலும் 373 பேருக்கு கரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 36,687 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 39,196 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 2,286 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.