கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள கல்லிங்கரை பகுதியில் காட்டு யானை ஒன்று, அந்த பகுதியிலுள்ள வீடுகளையும், தோட்டங்களையும் சுற்றி வருவதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து யாரும் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருந்த நிலையில், நீண்ட நேரத்திற்குப் பிறகு அடுத்த பகுதியில் உள்ள குடியிருப்பு தோட்டத்திற்கு சென்றது.