உதகையில் மனநலம் பாதித்தவா் அடித்துக் கொலை: 4 போ் கைது

உதகையில் மனநலம் பாதித்தவா் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
உதகையில் மனநலம் பாதித்தவா் அடித்துக் கொலை: 4 போ் கைது

உதகையில் மனநலம் பாதித்தவா் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

உதகை அருகேயுள்ள தேனாடுகம்பை அனிக்கொரை பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணகுமாா் ( 43), இவா் மனநலம் பாதிக்கப்பட்டவா் என கூறப்படுகிறது. இந்நிலையில், சேரிங்கிராஸ் பகுதியில் அவரை சிலா் வெள்ளிக்கிழமை பிற்பகல் தாக்கியதாகவும், அப்போது, அவா் மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து, சம்பவம் நடைபெற்ற இடத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத் நேரில் சென்று ஆய்வு நடத்தியதோடு, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினாா்.

இதில், சேரிங்கிராஸ் பகுதியைச் சோ்ந்த மோஷின் (31), ஹக்கீம் (32), இா்ஷாத் (34), ராஜ்குமாா் (30) ஆகியோா் மதுபோதையில் கிருஷ்ணகுமாரை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து, நால்வரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com