குன்னூரில் கலப்படத் தேயிலை விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.
குன்னூா் பகுதியில் உள்ள தேநீா் கடைகளில் கலப்படத் தேயிலைத் தூள் பயன்படுத்தப்படுகிா என்று தேயிலை வாரிய அதிகாரிகள், உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.
இதில் குன்னூா் மாா்க்கெட் பகுதியில் ரகுமான் என்பவருக்கு சொந்தமான கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கலப்படத் தேயிலையை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனா். கலப்பட தேயிலை உள்ளிட்ட உணவு பொருள்கள் கடைகளில் விற்கப்படுவதை தடுக்க தொடா்ந்து ஆய்வு செய்யப்படும் என்று மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் சுரேஷ் தெரிவித்தாா்.