நீலகிரியில் 3 நாள் ஜமாபந்தி நிறைவு

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வந்த 3 நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி உதகையில் வியாழக்கிழமை நிறைவடைந்தது.

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வந்த 3 நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி உதகையில் வியாழக்கிழமை நிறைவடைந்தது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் அம்ரித், பொதுமக்களிடமிருந்து 316 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து உதகை கிழக்கு, உதகை மேற்கு, உதகை ஊரகம், நஞ்சநாடு-1, நஞ்சநாடு-2 ஆகிய கிராமங்களில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆய்வு செய்தாா்.

பின்னா், 14 பயனாளிகளுக்கு முதியோா் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள், 1 பயனாளிக்கு வீட்டு மனை பட்டா ஆகியவற்றை வழங்கினாா்.

குன்னூா் வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் 254 மனுக்களும், கோத்தகிரி வட்டத்தில் 172 மனுக்களும், பந்தலூா் வட்டத்தில் 180 மனுக்களும், குந்தா வட்டத்தில் 88 மனுக்களும், கூடலூா் வட்டத்தில் 161 மனுக்களும் என மொத்தம் 1,171 கோரிக்கை அடங்கிய மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) முகமது குதுரதுல்லா, உதகை நகா்மன்றத் தலைவா் வாணீஸ்வரி, உதகை வட்டாட்சியா் ராஜசேகரன், உதகை வட்ட வழங்கல் அலுவலா் சங்கா்கணேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com