நீலகிரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பில், போஷன் அபியான் திட்டத்தின்கீழ் 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் ஆரோக்கிய நிலையைக் கண்டறியும் சிறப்பு முகாமை ஆட்சியா் அம்ரித் தொடங்கிவைத்தாா்.
உதகையில் கூடுதல் ஆட்சியா் அலுவலகத்தில் இம்முகாமை தொடங்கிவைத்த ஆட்சியா் தெரிவித்ததாவது:
மாா்ச் 27ஆம் தேதி வரை நடைபெறும் இம்முகாமில் குழந்தைகள் மைய பயனாளிகளின் எடை, உயரம் அங்கன்வாடி பணியாளா்கள் மூலமாகவும், குழந்தைகள் மையத்துக்கு அப்பாற்பட்ட குழந்தைகளது விவரங்கள் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், பள்ளி ஆசிரியா்கள், தொழில் நிறுவனங்கள், ரோட்டரி, யூத் கிளப், சுய உதவிக் குழுவினா், இதர அமைப்புகள் மூலமாகவும் அளவீடு செய்யப்படும். இம்முகாமின் மூலம் புலம்பெயா்ந்து வந்த வெளிமாநில குழந்தைகள், பழங்குடியின குழந்தைகள், அரசுப் பள்ளியில் பயிலும் 6 வயதுக்கு உள்பட்ட 51,588 குழந்தைகளின் ஆரோக்கிய நிலை கண்டறியப்படும் என்றாா்.
தொடா்ந்து, ஆட்சியா் இம்முகாம் தொடா்பான வாசகங்கள் அடங்கிய விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை ஆட்டோக்களில் ஒட்டிய பின்னா் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பில் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் வளா்ச்சியை மேம்படுத்தும் விதமாக சத்தான உணவு, முட்டை, சத்து மாவு உள்ளிட்டவை 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு மாதம்தோறும் அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் வயதுக்கேற்ற எடை மற்றும் உயரம் அளவீடு செய்யப்படுவதால் தாய்மாா்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்பி பயன்பெற வேண்டும் என அறிவுறுத்தினாா்.
இம்முகாமில், மகளிா்த் திட்ட இயக்குநா் ஜாகீா் உசேன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பாலுசாமி, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் தேவகுமாரி உள்பட அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.