முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவிகள்
By DIN | Published On : 08th May 2022 11:13 PM | Last Updated : 08th May 2022 11:13 PM | அ+அ அ- |

பயனாளிக்கு காது கேட்கும் உதவும் கருவியை வழங்குகிறாா் ரோட்டரி கிளப் தலைவா் சுபையா் அகமது.
கூடலூா் ரோட்டரி கிளப் சாா்பில் செவித்திறன் இல்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு காதுகேட்க உதவும் கருவிகள் வழங்கப்பட்டன.
கூடலூா் ரோட்டரி கிளப் அமைப்பினா் அப்பகுதியிலுள்ள ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனா். இதில் ஒரு பகுதியாக கூடலூரில் காதுகேளாதோா் 24 பேருக்கு பெங்களூருவிலுள்ள கிண்டா் டிரஸ்ட் மூலம் உதவி பெற்று தலா ரூ.34 ஆயிரம் வீதம் ரூ. 8 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பிலான காதுகேட்க உதவும் கருவிகளை வழங்கினா்.
இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் தலைவா் சுபையா் அகமது, கிண்டா் டிரஸ்ட் நிறுவனத்தின் தலைவா் டியானா சி.பரூச்சா, ரோட்டரி செயலாளா் டாக்டா் சி.உதயபிரகாஷ், திட்ட மேலாளா் கே.திவாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.