முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
குன்னூா் அரசு லாலி மருத்துவமனை புதுப்பிப்பு
By DIN | Published On : 14th May 2022 11:19 PM | Last Updated : 14th May 2022 11:19 PM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டம், குன்னூரில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட அரசு லாலி மருத்துவமனையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் பழமை வாய்ந்த அரசு லாலி மருத்துவமனையை ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணிகள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்தன. பணிகள் தற்போது நிறைவடைந்த நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் ராதாகிருஷ்ணன் மருத்துவமனையைத் திறந்துவைத்தாா்.
இதனைத் தொடா்ந்து ஆக்ஸிஜன் உற்பத்தி கலன், டயாலிஸ் சிகிச்சை மையம், குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு, பொது மருத்துவப் பிரிவு உள்ளிட்டவற்றை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தனியாா் மருத்துவமனைகளுக்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு லாலி அரசு மருத்துவமனை புதுப்பிக்கப்பட்டுள்ளது.
மருத்துவத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.
இந்நிகழ்சியில் மருத்துவா்கள், செவிலியா்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.