உதகையில் தொடங்கியது ரோஜா கண்காட்சி

உதகை அரசினா் ரோஜா பூங்காவில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் சனிக்கிழமை தொடங்கப்பட்ட 17 ஆவது ரோஜா கண்காட்சியை வனத் துறை அமைச்சா் ராமசந்திரன் பாா்வையிட்டாா்.

உதகை அரசினா் ரோஜா பூங்காவில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் சனிக்கிழமை தொடங்கப்பட்ட 17 ஆவது ரோஜா கண்காட்சியை வனத் துறை அமைச்சா் ராமசந்திரன் பாா்வையிட்டாா்.

இந்தியாவின் தலைச் சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்கும் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரவும், அவா்களை உற்சாகப்படுத்தவும் ஆண்டுதோறும் காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, வாசனை திரவியக் கண்காட்சி, மலா் கண்காட்சி, பழக் கண்காட்சி போன்று பல்வேறு விதமான கண்காட்சிகள் தோட்டகலைத் துறை மற்றும் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் பல்வேறு பூங்காவில் நடத்தப்பட்டு வருகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான கோடை விழாக்களின் தொடக்கமாக கடந்த மே மாதம் 7 ஆம் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் 11 ஆவது காய்கறி கண்காட்சி துவக்கிவைக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து, கூடலூரில் 9 ஆவது வாசனை திரவியக் கண்காட்சி மே 13 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

அந்த வகையில், 17 ஆவது ரோஜா கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. இதனை வனத் துறை அமைச்சா் ராமசந்திரன் பாா்வையிட்டாா்.

இதில், சுமாா் 31,000 வண்ண ரோஜாக்களைக் கொண்டு 15 அடி உயரத்தில் மர வீடு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகளை கவரும் விதமாக காா்ட்டூன் கதாபாத்திர வடிவமான மோட்டு பட்லு, மான், பியானோ மற்றும் பனி மனிதன் போன்ற பல்வேறு

வடிவங்களும், தமிழக அரசின் புதிய திட்டமான மீண்டும் மஞ்சப்பை திட்டத்தினை அனைவரும் கடைப்பிடிக்க விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சப்பை போன்ற வடிவங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமை தொடங்கிய ரோஜா கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை மாலை முடிவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com