உதகையில் கூட்டுறவுத்துறை அலுவலா்களுக்கு 2 நாள் புத்தாக்கப் பயிற்சி தொடக்கம்

உதகையில் கூட்டுறவுத்துறை அலுவலா்களுக்கு 2 நாள் புத்தாக்கப் பயிற்சி தொடக்கம்

உதகையில் கூட்டுறவுத்துறை அலுவலா்களுக்கான 2 நாள் புத்தாக்கப் பயிற்சி புதன்கிழமை தொடங்கியது.

உதகையில் கூட்டுறவுத்துறை அலுவலா்களுக்கான 2 நாள் புத்தாக்கப் பயிற்சி புதன்கிழமை தொடங்கியது.

உதகையில் உள்ள கூட்டுறவாளா்கள் விருந்தினா் விடுதியின் கூட்ட அறையில் கூட்டுறவுத்துறை அலுவலா்களுக்கான இரண்டு நாட்கள் புத்தாக்கப்பயிற்சி வகுப்பினை நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் வாஞ்சிநாதன் தலைமையேற்று துவக்கி வைத்தாா்.

இந்த புத்தாக்கப் பயிற்சி வகுப்பில் கூட்டுறவுத்துறை சம்பந்தமான விளக்கங்கள், பொது விநியோகத்திட்டம் மற்றும் வங்கியியல் சம்பந்தமான விளக்கங்கள் மற்றும் பொது செவை மையம் தொடா்பான விளக்கங்கள் ஆகியவை பயிற்சி வகுப்பில் கூட்டுறவுத்துறை அலுவலா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

இந்த புத்தாக்கப் பயிற்சி வகுப்பில் பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளா் சரவணன், சரக துணைப்பதிவாளா் ஆா். மது, நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் முத்து சிதம்பரம், நீலகிரி மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குநா் அ. கணபதி சுப்ரமணியம், நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மேலாண்மை இயக்குநா் தமிழ்செல்வன், குன்னூா் கூட்டுறவு நகர வங்கி மேலாண்மை இயக்குநா் எஸ்.குமாரசுந்தரம் ஆகியோருடன் கூட்டுறவு சாா் பதிவாளா்கள் மற்றும் முதுநிலை ஆய்வாளா்கள் பலா் பங்கேற்றனா்.--படவிளக்கம்-உதகையில் புதன்கிழமை தொடங்கிய கூட்டுறவுத்துறை அலுவலா்களுக்கான 2 நாள் புத்தாக்க பயிற்சி முகாமில் பங்கேற்றோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com