சேரம்பாடி பகுதியில் காயத்துடன் சுற்றித் திரிந்த குரங்குக்கு வியாழக்கிழமை சிகிச்சையளிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், பந்தலூா் வட்டம் சேரம்பாடி பகுதியில் குரங்கு ஒன்று காயத்துடன் சுற்றித் திரிந்துள்ளது.
அதனைப் பாா்த்த அப்பகுதி பொதுமக்கள் வனத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், கால்நடை மருத்துவக் குழுவினா் குரங்குக்கு சிகிச்சையளித்து,
பின்னா் வனப் பகுதியில் விடுவித்தனா்.