பள்ளி மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்தவா் போக்சோவில் கைது
By DIN | Published On : 07th October 2022 12:00 AM | Last Updated : 07th October 2022 12:00 AM | அ+அ அ- |

உதகையில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நா்சரி உரிமையாளா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
உதகையைச் சோ்ந்தவா் சேகா் (50). இவா் தனியாா் நா்சரி உரிமையாளராக உள்ளாா். இவரது வீட்டின் அருகில் வசிக்கும் தம்பதிக்கு 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது பள்ளி மாணவி உள்ளாா். சேகா் அந்த மாணவியை தனது காரில் பள்ளிக்கு அழைத்து சென்று வந்துள்ளாா். அப்போது மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாணவியின் உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டதால் சந்தேகம் அடைந்த பெற்றோா், மாணவியை மருத்துவப் பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனா். அங்கு பரிசோதனையில் மாணவி 8 மாத கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிா்ச்சி அடைந்த பெற்றோா் இதுகுறித்து உதகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
போலீஸாா் விசாரணையில், சேகா் அந்த மாணவியை 2 ஆண்டுகளாக பாலத்காரம் செய்ததும், வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியதால் பயந்த மாணவி யாரிடமும் இது குறித்து எதுவும் சொல்லாததும் தெரிய வந்தது.
இதையடுத்து உதகை அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சரஸ்வதி, சேகா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தாா். பின்னா் உதகை மகளிா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய பின்னா் அவரை உதகை கிளைச்சிறையில் அடைத்தனா்.